கறம்பக்குடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-09 19:16 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள இலைகடி விடுதி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் சிலருக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகவும் கூறி தொழிலாளர்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்