விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

Update: 2021-09-09 20:09 GMT
அரியலூர்:

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. சதுர்த்தியன்று 2 அடி வரையிலான விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு நடத்தவும், பின்னர் தனி நபராக அந்த சிலையை எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம். அல்லது வீட்டில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலையை அருகே கோவில்கள் முன்பு வைத்தால், அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் சேகரித்து நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவதற்காக, சிலைகள் வாங்கினர். அரியலூர் நகரில்  கடைகளில் சிறிய அளவிலான சிலைகள் பல வண்ணங்களில், பல வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான சிலைகளை வாங்கி சென்றனர். இதனால் சிறிய விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனையானது.

மேலும் செய்திகள்