திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு

சாத்தூரில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-09 20:25 GMT
விருதுநகர், 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சண்முகசுந்தரி (வயது 60). இவர்கள் இருவரும் சாத்தூர் அமீர் பாளையம் பகுதியில் நடைபெறும் திருமணத்திற்காக வந்திருந்தனர். திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் சண்முக சுந்தரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விட்டனர். இதுபற்றி சண்முகசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்