கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையில் இது தான் குறைந்தபட்ச இறப்பு ஆகும்.

Update: 2021-09-09 20:30 GMT
பெங்களூரு:கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையில் இது தான் குறைந்தபட்ச இறப்பு ஆகும்.

1,079 பேருக்கு கொரோனா

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 448 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,079 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 59 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது.

1,136 பேர் டிஸ்சார்ஜ்

1,136 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 4 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. 16 ஆயிரத்து 992 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 
பெங்களூரு நகரில் 343 பேர், தட்சிண கன்னடாவில் 176 பேர், ஹாசனில் 81 பேர், மைசூருவில் 48 பேர், குடகில் 59 பேர், உடுப்பியில் 126 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 3 பேரும், ஹாசனில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச இறப்பு

கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். கொரோனா 2-வது அலையில் கர்நாடகத்தில் பதிவான குறைந்தபட்ச இறப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்