பட்டதாரி வாலிபர் தற்கொலை

பட்டதாரி வாலிபர் தற்கொலை

Update: 2021-09-09 20:32 GMT
கடையநல்லூர் :
கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சுபாஷ் (வயது 24). பி.எஸ்சி. பட்டதாரி. இவருடைய பெற்றோர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு சென்றனர். அப்போது சுபாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, சுபாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபாஷ் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்