மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2021-09-09 20:46 GMT
களக்காடு :
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் எபநேசர் (வயது 22). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவில்  தேவநல்லூர் கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எபநேசர் இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்