ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார்குளம், நக்கனேரி, உதயத்தூர், பண்ணையார்குளம் ஆகிய கிராமங்களில் ஆடுகள் திருட்டு போனது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் வைராவிகிணறு நடுத்தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் அஜித்குமார் (வயது 23) என்பவர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அஜித்குமாரை கைது செய்து 8 ஆடுகள், பணத்தை மீட்டனர்.