கோவில்பட்டியில் நாளை 102 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவில்பட்டியில் நாளை 102 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது

Update: 2021-09-10 14:40 GMT
கோவில்பட்டி:
தமிழகம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நகரில் அரசு மருத்துவமனை, நகரசபை அலுவலகம், புனித ஓம் பள்ளி, செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாய கூடம், ஸ்ரீராம் நகர் நகர்நல மையம் உள்பட 33 மையங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 69 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நகரசபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களில் 100 பேரை தேர்ந்தெடுத்து குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க காசு, 5 பேருக்கு வயர்லெஸ் ஹெட்போன், 50 பேருக்கு சேலை, 30 பேருக்கு ஹாட் பாக்ஸ், 20 பேருக்கு டி-சர்ட் பரிசு வழங்கப்படுகிறது.
முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவர் உமா செல்வி, சுகாதார ஆய்வாளர் இளங்கோ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்