கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-09-10 16:40 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தமாக 42 ஆயிரத்து 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 201 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 333 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்