2 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-10 17:02 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 236 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 40 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 353 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்