தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் பசுபதிபாளையம் பகுதிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட உறவினர்கள் நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.