நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-10 18:29 GMT
கீரனூர், 
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒடுக்கூரை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் வீரலட்சுமி (வயது 18). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் அக்கம்பக்கம் வீடுகளுக்கு சென்று வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறையில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வீரலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்