மணல் திருடிய வாலிபர் கைது
இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு போலீசார் செண்பகத்தோப்பு சாலையில் சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 சாக்கு மூடைகளில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்ததும், அதே பகுதியை சேர்ந்த முத்துவீரன் (வயது29) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முத்து வீரனை கைது செய்தனர்.