காய்கறி திருடியவர் கைது

சிவகாசியில் காய்கறி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-10 20:38 GMT
சிவகாசி, 
சிவகாசி சாட்சியாபுரம் சுந்தரம்விநாயகர் காலனியில் உணவகம் நடத்தி வருபவர் முருகன் (வயது 47). இவரது ஓட்டலின் அருகில் காய்கறி மூடையை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் நல்லசிவம் (24) என்பவர் அந்த காய்கறி மூடைகளை திருடி செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி திருடிய நல்லசிவத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்