தொழிலாளி தற்கொலை

விருதுநகரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-10 20:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் கட்டபொம்மன்தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரது கணவர் ராமகிருஷ்ணன் (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான ராமகிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அருகில் உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வேலை இல்லாததால் தான் வசிக்கும் வீட்டில் ராமகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்