பேரணாம்பட்டு அருகே 15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

Update: 2021-09-11 13:39 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட வளத்தூர் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள விநாயகர் கோவில் அருகில்  புதர் ஒன்றில் மலைபாம்பு இருப்பதாக குடியாத்தம் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வராததால், பேரணாம்பட்டு வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலறிந்த உடனே பேரணாம்பட்டு வனவர் ஹரி, வனகாப்பாளர் விஸ்வநாதன் மற்றும் வனத்துறையினர் வளத்தூர் கிராமத்திற்கு சென்று புதரில் பதுங்கியிருந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைபாம்பை கிராம மக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் விரிவு காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

மேலும் செய்திகள்