மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி
மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலியானார்.
காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் நேரு (வயது 33). மெக்கானிக்கான இவர் வீட்டில் பழுதான மின் சாத னங்களை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.