கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேன் உரிமையாளர் உள்பட 2 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேன் உரிமையாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-09-11 18:03 GMT
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள படவனூர் கேட் அனுமந்த நகரை சேர்ந்தவர் வேலவன் (வயது 26). வேன் உரிமையாளர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த வேலவன் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேலவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 கிருஷ்ணகிரி பழையபேட்டை சாகிப் தெருவை சேர்ந்தவர் ரியாஸ்  21). எண்ணெய் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரியாஸ் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரியாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்