விஷம் குடித்து முதியவர் சாவு

காரியாபட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.

Update: 2021-09-11 19:42 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே பிசிண்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 49). இவர் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தும் பலன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அவரை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  பிரேம்குமார் இறந்தார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்