குளத்தில் மண் அள்ளியவர் கைது

குளத்தில் மண் அள்ளியவர் கைது

Update: 2021-09-11 21:59 GMT
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள தெற்கு கருங்குளம் பூந்தொட்டி குளத்தில் சிலர் மண் அள்ளுவதாக பழவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் மாவடியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 47) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள். மேலும் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்