விபசாரத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

விபசாரத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

Update: 2021-09-11 22:09 GMT
அம்பை:
அம்பையில் ஒரு பகுதியில் விபசாரம் நடப்பதாக அம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் அன்னஜோதி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த 5 பெண்கள், 3 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்