பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-12 21:46 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி மீனவர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பொன்மலை(வயது 11). இவர் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். ேமலும் பொன்மலை சற்று மனநிலை பாதிப்படைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு ெபான்மலை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கை.களத்தூர் போலீசார், பொன்மலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்