புனேவில் இருந்து 13½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-13 09:39 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 67 லட்சத்து 87 ஆயிரத்து 290 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இதுவரை 54 லட்சத்து 7 ஆயிரத்து 60 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் 113 பெட்டிகளில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 160 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்