கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி

குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி.

Update: 2021-09-13 12:17 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று பொதுமக்களுக்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தது. குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 99 முகாம்களில் நடைபெற்றது. இந்த நிலையில் படப்பை, மணிமங்கலம், வரதராஜபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்