பயணி தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்

பயணி தவறவிட்ட நகையை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்

Update: 2021-09-13 17:06 GMT
திருப்புவனம், 
பரமக்குடி அருகே நல்லிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவர் மதுரையில் தனியார் பஸ்சில் இருந்து திருப் புவனம் வந்துள்ளார். பஸ்சில் இருந்து இறங்கிய உடன் தான் அருகில் வைத்திருந்த பையை எடுக்காமல் மறந்து இறங்கி விட்டார். அந்தப் பையில் 2 பவுன் செயின், ரூ. 500-ம் இருந் துள்ளது. இதுகுறித்து உடனடியாக திருப்புவனம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்து திருப்புவனம் போலீசார் சீனிவாசன், சசிவர்ணம் ஆகிய 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் அனுப்பி உள்ளார். போலீஸ்காரர்கள் 2 பேரும் சென்று பஸ்சில் இருந்த பையை எடுத்து வந்து 2 பவுன் செயின், ரூ. 500-ஐ உரியவரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்