நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-13 17:18 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு  மற்றும் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அனைத்து மக்கள் விடுதலை கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மரியாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வளர்மதி, வேல்முருகன், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவன தலைவர் பூபதி, மாநில செய்தி தொடர்பாளர் நசீரா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கண்ணன், சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாட்சா, கொளஞ்சி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்