ரெயில் மோதி முதியவர் சாவு

வெள்ளியணையில் ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-13 18:03 GMT
வெள்ளியணை, 
ரெயில் மோதியது
வெள்ளியணை அருகே உள்ள தாளியாபட்டியை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் வெள்ளியணையில் உள்ள தனியார் மாவு மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலை முடிந்து மாலையில் கரூர்-திண்டுக்கல் ரெயில்வே பாதை வழியாக நடந்து வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று மாலை ரெயில் பாதையை கடக்கும் போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரெயில் ஒன்று எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்