பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தளவாபாளையம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-09-13 18:06 GMT
நொய்யல்,
பெட்ரோல் விற்பனை நிலையம்
நடையனூர் அருகே சொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன் ( வயது22). இவர் தளவாபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வாங்கல் அருகே செவ்வந்திபாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (25) என்பவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார். இதற்கு காளிதாசன் பணம் கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா பணம் தர முடியாது என்று கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 
4 பேர் மீது வழக்கு
மேலும், இளையராஜா மற்றும் அவருடன் வந்திருந்த 3 பேர் சேர்ந்து காளிதாசனை சரமாரியாக தாக்கி பணம் கேட்டால் பெட்ரோல் நிலையத்தை தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  வேலாயுதம்பாளையம் போலீசில் காளிதாசன் புகார் அளித்தார்.இதையடுத்து, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்