கடையம்:
நெல்லை - தென்காசி ரெயில்வே வழித்தடத்தில் ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் காலையில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை மிளா ஒன்று ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையம் அருகே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் வந்து, மிளாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.