ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ், மாநில தலைவர் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் மாயமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 9 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.