கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி

சிறுமலை அருகே கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார்.

Update: 2021-09-13 21:19 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே புதூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 65). இவரது கணவர் நாகசாமி கடந்த 3 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. அது சுமார் 20 அடி ஆழம் கொண்டது. அதில் 10 அடி ஆழம் தண்ணீர் இருந்தது. 


அந்த கிணற்றில் முத்துலட்சுமி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. 

இதையடுத்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்