பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 2 பேர் திண்டுக்கல், கொடைக்கானலை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆவர்.
இதன்மூலம் கடந்த 1-ந்தேதிக்கு பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 11 ஆனது. இதற்கிடையே நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.