சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது.

Update: 2021-09-14 10:01 GMT
சென்னை,

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 21). கல்லூரி மாணவரான இவர், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர் நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை மேம்பாலம் கீழ், பீட்டர்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வெட்டிக் கொலை செய்யும் நோக்கில் 3 பேர் கையில் அரிவாளுடன் விரட்டினார்கள். அவர்களிடம் சிக்காமல் பிரதீப்குமார் ஓட்டம் பிடித்தார்.

3 பேரும் விரட்ட, பிரதீப்குமார் அவர்களிடம் மாட்டாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தார். சினிமா காட்சி போல பெரும் பரபரப்பாக நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஐஸ்-அவுஸ் ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரிவாளால் பிரதீப்குமாரை வெட்டப்பாய்ந்த ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யோவான் (24), ஜீவா (19), தவுலத்பாஷா (23) ஆகிய 3 பேரையும் மடக்கிப பிடித்து கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அன்றைய தினம் பகலில் நடந்த சண்டையை தொடர்ந்து, இரவில் பிரதீப்குமாரை தீர்த்துக்கட்ட இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்