தேவதானப்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திய டிரைவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 12:47 GMT
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சித்திரைக்கனி (வயது 40). ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் மகேஸ்வரன் (49). வேன் டிரைவர். இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் இவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதை திருப்பி கட்டுமாறு மனைவியை வற்புறுத்தினார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 
எனவே சித்திரைக்கனி கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று மகேஸ்வரன் அங்கு சென்று சித்திரைக்கனியிடம் தகராறு செய்தார். அப்போது மகேஸ்வரன் ஆத்திரத்தில் சித்திரைக்கனியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்