முன் விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து

முன் விரோதம் காரணமாக தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார்.

Update: 2021-09-14 13:52 GMT
போடி:
போடி கீழத்தெரு ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). கூலித்தொழிலாளி. போடி கீழத்தெரு கள்ளர் பள்ளி அருகில் குடியிருப்பவர் சன்னாசி (36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டிக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் மருதுபாண்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். 
இதைத்தொடர்ந்து சன்னாசிக்கும் கண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது, இந்நிலையில் நேற்று சன்னாசி கண்ணனின் வீட்டுக்கு சென்று அவரை திட்டி தாக்கினார். பின்னர் அவர் ஆத்திரத்தில் கண்ணனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 
இதில் படுகாயமடைந்த கண்ணன் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சன்னாசியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்