கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-14 16:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,803 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்