வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

Update: 2021-09-14 17:11 GMT
கிருஷ்ணகிரி,செப்.15-
4 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
 பாலியல் தொந்தரவு 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாலமரத்துப்பட்டியை அடுத்த குருகபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 23).
இவர், 4 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
ஜெயில்
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்