மணமகன் கைது

மணமகளின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மணமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 18:20 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், கோட்டூரை சேர்ந்த துரைராஜ் மகன் பிரபு(37) என்பவருக்கும் கடந்த 8-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இருவீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்றது. இது தொடர்பாக மணமகளின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த மணமகன் பிரபு, அவரது தாய் மற்றும் உறவினர்கள் 2 பேர் மணமகளின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்

மேலும் செய்திகள்