மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-14 18:30 GMT
நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் இந்திரா நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 39). இவர் தனது வீட்டின் பின்புறம் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோகைமலை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 35). இவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாதாக தோகைமலை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்