தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-14 18:35 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். இவருடைய மனைவி வாசுகி (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுகி வீட்டின் உத்தரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வாசுகியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்