வாலிபருக்கு கத்திக்குத்து
ராமநாதபுரத்தில் மின்தகன சுடுகாட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ராமநாதபுரம்,
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த இறந்த ஒருவரது உடல் கொண்டு வந்தபோது அங்கு வந்த ஒருவர் தகராறு செய்து உள்ளார்.. இதுகுறித்து தனுசு கண்டித்தபோது அருகில் கிடந்த முள்கம்பால் தாக்கியதுடன் கத்தியால் அவரை குத்தினாராம். இதில் படுகாயமடைந்த தனுசு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தாக்கிய நபரை தேடிவருகின்றனர்.