ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் சாவு

ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.

Update: 2021-09-14 19:06 GMT
நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது 71). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக ஒரு அரசு பஸ்சில் குமுளிக்கு சென்று கொண்டிருந்தார். நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு பஸ் வந்தபோது சுந்தர் ராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்