தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வள்ளியூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் ஊற்றடி தெற்கு தெருவை சேர்ந்த முப்புடாதி மகன் பிரபு (வயது 36). சுமைதூக்கும் கூலி தொழிலாளி. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபுவின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.