தூய்மைப்பணியாளர் கொலை

தூய்மைப்பணியாளர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 20:24 GMT
மேலூர், 
மேலூர் அருகே உள்ளது தெற்குதெரு கிராமம். இங்கு ஊராட்சி மன்ற தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் நொண்டிச்சாமி (வயது52). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்.  இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டிய ராஜன் மர கட்டையால் தாக்கியதில் நொண்டிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.  சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள்  மதுரை-மேலூர் நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்