26 பேர் கொரோனாவால் பாதிப்பு

26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-09-14 20:31 GMT
மதுரை, 
மதுரையில் நேற்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 21 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 16 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 12 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 888 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 178 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் மதுரையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்