ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-15 14:27 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதியில் உள்ள முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு ஆகிய சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கை, கால்களில் காய கட்டு போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.  கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். போரட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புறநகர் செயலாளர் ராஜா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இந்தப் போராட்டத்தில் கிளை உறுப்பினர்கள் ரஞ்சித் குமார், ஜெயராஜ், முத்துசேதுபதி, ஆனந்த், மாரிசெல்வம், சஞ்சய், ராமர், விஜய், துரைராஜ், சக்தி, முத்துசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்