தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்
தாராபுரம்,
தாராபுரம் அலங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் அலங்கியம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சர்மிளா தலைமை தாங்கினார். அலங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் முகாமை தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு மருந்து வழங்கினார். மேலும் முகாமில் சுகாதார ஆய்வாளர் ராஜீ மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.