தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

வள்ளியூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2021-09-15 19:37 GMT
வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி தெற்கு தெருவை சேர்ந்த வைகுண்டராஜன் மகன் தர்மராஜ் (வயது 32). இவருடைய மனைவி ராதிகா லிங்கேஸ்வரி. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளிகள். நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். 

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவின் கதவையும் உடைத்து உள்ளே இருந்த 3 பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்