மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-16 20:17 GMT
வேப்பந்தட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பனின் மகன் யோகராஜ்(வயது 21). இவர் சாலை அமைக்கும் பணிக்காக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது மாணவியை, திருமண ஆசை காட்டி யோகராஜ் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் தந்தை அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து யோகராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் மீட்கப்பட்ட மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்