கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

Update: 2021-09-16 20:51 GMT
சிவகாசி
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ் காலனியை சேர்ந்தவர் சேகர்(வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் இந்திராநகரில் உள்ள முனியசாமி கோவில் அருகில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்பு என்கிற கருப்பசாமி (35), முத்துக்குமார் என்கிற பூக்குமார் (32) ஆகியோர் வாலிபர் சேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சேகர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்